டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் ஒரு சில முன்னணி இயக்குனர்கள் தான், கதாசிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றி வருகிறார்கள். அந்தவகையில் ஒரு காலகட்டத்தில் ஷங்கரின் ஆஸ்தான கதாசிரியராக மறைந்த எழுத்தாளர் சுஜாதா இருந்தார். அவரது மறைவுக்குப்பின் எழுத்தாளர் ஜெயமோகனும், இரட்டை எழுத்தாளர்களான சுபாவும் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். இதில் எழுத்தாளர்கள் சுபா, இயக்குனர் கே.வி.ஆனந்தின் படங்களில் ஆரம்ப காலம் தொட்டே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
கடந்த இரண்டு வருட வருடங்களுக்கு முன் மோகன் ராஜாவுடன் இணைந்து இரட்டையர்கள் சுபா பணியாற்றிய 'தனி ஒருவன்' படம் மெகா ஹிட் ஆனது. அந்தப்படம் தான் தெலுங்கில் ராம்சரண் நடிக்க 'துருவா' என்கிற பெயரில் ரீமேக்காகி ஹிட்டானது. இதை தொடர்ந்து தெலுங்கில் இருந்தும் சுபாவுக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. இப்போது கல்யாண் ராம் நடிக்கும் புதிய படத்தில் கதாசிரியர்களாக பணியாற்றுவதன் மூலம் முதன்முறையாக தெலுங்கிலும் அடியெடுத்து வைக்கின்றனர் இந்த இரட்டை கதாசிரியர்கள். சித்தார்த் நடித்த '180' படத்தை இயக்கிய ஜெயேந்திரா தான் இந்தப்படத்தை இயக்குகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.