தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீப வருடங்களில் பார்த்தால் புதிய இயக்குனர்கள் டைரக்சனில் மோகன்லால் நடித்ததாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. அவருடைய ஆஸ்தான இயக்குனர்கள் மற்றும் ஒரு சில படங்களையாவது இயக்கிய இயக்குனர்கள் படங்களில் மட்டுமே மோகன்லால் நடித்து வருகிறார். அப்படி இருக்கையில் இயக்குனர் லால் ஜோஸ் மட்டும் என்ன பாவம் செய்தார்..? மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவர் தான் லால் ஜோஸ்.... சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. 22 படங்களை இயக்கி முடித்துவிட்டார்.. இவர் இயக்கியது எல்லாமே முன்னணி நடிகர்களின் படங்கள் தான்.
ஆனால் என்னதான் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தாலும் இத்தனை ஆண்டுகளில் மோகன்லால் படத்தை இயக்கும் சந்தர்ப்பம் இவருக்கு அமையவில்லையே என்பதில் லால் ஜோஸுக்கு மட்டுமல்ல, மோகன்லால் ரசிகர்களுக்கும் வருத்தம் தான். இடையில் ஏதோ சில மனகசப்புகளாலோ, அல்லது கருத்து வேறுபாடுகளாலோ இவர்கள் இருவரும் ஒரு படத்தில் கூட இணையாமல் இருந்தனர். தற்போது திருஷ்டி கழிந்து, இதோ முதன்முறையாக 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' என்கிற படத்தில் முதன்முறையாக இணைந்துள்ளனர்..
கடந்த பத்து நாட்களாக நடைபெற்று வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல்நாளாக மோகன்லால் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.. மோகன்லாலை வைத்து முதல் காட்சியை படமாக்கிய லால் ஜோஸ் ஆனந்த கண்ணீர் வடித்தாராம்.. இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் மோகன்லாலுடன் இணைந்து நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “இத்தனை நாள் கனவு இன்றுதான் நனவானது. காலம் தான் எவ்வளவு விசித்திரமானது.. இன்று மோகன்லாலை என் செட்டுக்கே அழைத்து வந்துவிட்டது.. நிச்சயம் மோகன்லால் ரசிகர்களுக்கும் என் படங்களுக்கான ரசிகர்களுக்கும் நியாயமான படமாக இது இருக்கும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் லால் ஜோஸ்.