பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
வெளி உலகத்திற்கு பளபளப்பாக தெரியும் ஐ.டி கம்பெனிகளில் நடக்கும் முறைகேடுகள், அவற்றால் வாழ்க்கை இழக்கும் இளைஞர்கள் என அதன் கருப்பு பக்கத்தை காட்டும் படமாக உருவாகி உள்ளது விளையாட்டு ஆரம்பம். சாட்டை யுவன், ஸ்ரவியா, ரியாஸ்கான், பானுசந்தர், எலிசெபத் உள்பட பலர் நடித்துள்ளனர். அருண்மொழி சோழன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். படத்தின் கதையை சாட்டை யுவனின் தந்தை பெரோஸ்கான் எழுதி உள்ளார். மேக் 56 ஸ்டூடியோ சார்பில் ஆனந்த் உதார்கர், கார்த்திகேயன் தயாரித்துள்ளனர். ஆர்.ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் இருவரும் இணைந்து இயக்கி உள்ளனர். படத்தை பற்றி அவர்கள் கூறியதாவது:
இன்று ஐ.டி., கம்பெனிகளில் வேலை செய்பவர்களைப் பற்றிய பதிவு தான் இந்தப் படம். ஆரம்பத்தில் ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்று சம்பளம் கைக்கு வரும் போது சந்தோஷம் தலை விரித்தாடும், இது நிரந்தரம் என்று நினைத்து விடுகிறார்கள். உடனே கடன் வாங்கி வீடு கார் என்று ஆடம்பரத்துக்கு மாறி விடுகிறார்கள். வாழ்க்கை ஸ்மூத்தாகப் போய் கொண்டிருக்கும் போது திடீரென்று கம்பெனி ஆட் குறைப்பு என்றும் பொருளாதார நெருக்கடி என்று சொல்லி வேலையை விட்டு நீக்கும் போதோ, இல்லை கம்பெனியையே மூடி விடும் நேரத்திலோ ஒவ்வொருவருக்கும் மன உளைச்சல். வீட்டுக்கு டியூ, காருக்கு டியூ, ஸ்கூல் பீஸ் என்று தடுமாற்றம். அவர்களை தற்கொலை வரை தூண்டி விடுகிறது. இதனை மையமாக கொண்டு படம் தயாராகி உள்ளது என்றார்கள்.