வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடியனாக நடித்து வருபவர் தாடி பாலாஜி. இவர் ஏற்கனவே குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சமீபத்தில் அவரது மனைவி நித்யா, காவல் நிலையத்தில் தாடி பாலாஜி மீது புகார் கொடுத்தார். அதில், கணவர் தன்னை குடித்து விட்டு வந்து அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், ஜாதி பெயரைச்சொல்லி திட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இதுகுறித்து தாடி பாலாஜியிடம் கேட்டபோது, குடும்பத்தில் சின்னச்சின்ன பிரச்சினைகள் வருவது சகஜமான ஒன்றுதான். அதேபோல்தான் என் வீட்டிலும் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. மேலும், நான் எனது மாமனார் வீட்டில்தான் வாடகை கொடுத்து குடியிருக்கிறேன். ஆனபோதும் என்னை அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். அதோடு, என் மனைவியுடன் எனக்கு ஏற்படும் சிறிய சண்டையை சிலர் ஊதி பெரிதுபடுத்துகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டுதான் என் மனைவி என் மீது புகார் செய்திருக்கிறார். ஆனாலும், இந்த பிரச்சினை விரைவில் சரியாகி விடும் என்று நினைக்கிறேன் என்கிறார் தாடி பாலாஜி.