ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு |
இந்தியில் 2011முதல் 2016 வரை ஒளிபரப்பான மெகா சீரியல் தியா ஆர் பாத்தி ஹம். ரோகித் ராஜ் கோயல் என்பவர் இந்த தொடரை இயக்கினார். இதில் நாயகியாக நடித்தவர் தீபிகா சிங். இந்த தொடரில் பணியாற்றி வந்தபோது இயக்குனர் ரோகித் ராஜ் கோயலுக்கும், தீபிகா சிங்கிற்குமிடையே காதல் மலர்ந்ததை அடுத்து 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு சீரியல் நிறைவு பெற்றதை அடுத்து கர்ப்பமான தீபிகா சிங்கிற்கு, மே 20-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை ரோகித் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள். எங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தியில் ஏராளமான ரசிகர் ரசிகைகளை கொண்டுள்ள தீபிகா சிங், அடுத்து மீண்டும் நடிக்க வருவாரா? இல்லை முழுநேர குடும்பத்தலைவியாகி விடுவாரா? என்கிற கேள்விகள் பாலிவுட்டில் எழுந்திருக்கிறது.
மேலும், இந்தியில் தீபிகா சிங் நடித்த தியா ஆர் பாத்தி ஹம் என்ற அந்த தொடர் பின்னர் தமிழில், என் கணவன் என் தோழன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது.