மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்தபோது அரசியல் குறித்த சில விசயங்களையும் பேசினார். ஆனால் இன்னும் அவர் வருவேனா வர மாட்டேனோ என்பதை தெளிவுபடுத்தவில்லை. ஒருவேளை வந்தால்... என்றுதான் பேசினார். அதற்குள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையிலும் டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும். வருவேனா மாட்டேனா என்பதையே வருடக்கணக்கில் யோசிப்பவரால் எப்படி சாத்தியமாகும் என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டவர், போர் போர் என்று சொல்லி போர் அடிக்காதீங்க என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு நறுக்கென்று சிலருக்கு பதில் கொடுத்தார் கஸ்தூரி. அதில் ஒரு ரசிகர்கள் திரைத்துறையில் இருந்து கொண்டே இவ்வளவு கேவலமாக ரஜினியை விமர்சிப்பது சரியா...? என்று கேட்க, அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, "தற்போது, நான் சிறுவயதில் இருந்தே ரஜினியின் ரசிகை. விரக்தியில் அப்படி விமர்சித்து விட்டேன். எல்லோரது மனதிலும் இருக்கிற ஆதங்கத்தைதான் நான் சொல்லியிருக்கிறேன்" என்று டுவிட் செய்துள்ளார்.