இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தெலுங்கில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியான சரித்திர படங்கள் தமிழுக்கு மொழிமாற்றம் செய்து கொண்டு வரப்பட இருக்கிறது. அந்த வரிசையில் முதலில் வருகிறது கெளதமி புத்ர சாதகர்ணி. இது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 100 வது படம். 100 கோடியில் தயாரிக்கப்பட்டு 150 கோடி லாபம் கொடுத்த படம். இதில் பாலகிருஷ்ணாவுடன் ஸ்ரேயா, ஹேமமாலினி, கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகா சுதாகர் ஆகியோர் நடித்துள்ளனர். சிரஞ்சன் இசை அமைத்துள்ளார். ஞானசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் இயக்கி உள்ளார். இந்தப் படம் அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. தமிழில் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். தமிழ் வசனங்களை மருதபரணி எழுதுகிறார்.
இந்த கதை நடந்தது முதலாம் நூற்றாண்டில். முழு பாரத கண்டத்தையும் வடக்கே நஹபாணன், தெற்கே சாதகர்ணி ஆண்டு வந்தனர். இதில் நஹபாணன் கொடுங்கோல் ஆட்சி செய்தவன். தனக்கு கீழ் இருந்த குரு நில மன்னர்களின் பிள்ளைகளை எல்லாம் சிறை பிடித்து வைத்துக் கொண்டான். தன் மீது யாரும் படையெடுத்துவிடக் கூடாது என்று அந்த குரு நில மன்னர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டான்.
இதனால் கோபமான சாதகர்ணி அம்மாவின் ஆசிர்வாதத்துடன் போருக்கு கிளம்பினான். தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், அதிக மரியாதை கொண்டவன் சாதகர்ணி. தன் மகனுடன் போருக்குப் போன சாதகர்ணி, நஹபாணனின் தந்திரங்களையும் நரித்தனத்தையும் முறியடித்ததுடன் பல குரு நிலங்களையும் கைப்பற்றி வெற்றி வீரன் ஆனான்..
சாதகர்ணியின் சிறு வயது ஆசையே பாரத நாடு முழுவதும் ஒரு குடையின் கீழ் அமைய வேண்டும் என்பது தான். அந்த ஆசையை அடைந்தான். அந்த வெற்றியை கொண்டாடிய மக்கள் சாதகர்ணி என்கிற பெயருக்கு முன்னால் அவரது தாயார் கெளதமி பெயரை சூட்டி கெளதமி புத்ர சாதகர்ணி என்று பாராட்டினர். தாயின் பெயரை இன்ஷியலாகக் கொண்ட முதல் இந்தியன் என்கிற பெருமையை பெற்றான். இதுதான் படத்தின் கதை.