பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ்சினிமாவிற்கு மட்டுமல்ல, மலையாள சினிமாவும் கலாச்சார காவலர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலரால் அவ்வப்போது எதிர்ப்பையும் பட ரிலீசில் சிக்கல்களையும் சந்தித்துத்தான் வருகின்றது. அதில் லேட்டஸ்ட்டாக எதிர்ப்புக்கு ஆளாகி இருபது, இன்னும் ஆரம்பிக்கவே படாத, தற்போது 'மகாபாரதம்' என டைட்டில் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ள மோகன்லாலின் ஆயிரம் கோடி பட்ஜெட்தான 'மகாபாரதம்' படம் தான். 'கேரள ஹிந்து ஐக்கிய வேதி' என்கிற அமைப்பின் தலைவரான கே.பி.சசிகலா என்பவர் தான் இதை எதிர்த்து குரல் கொடுத்திருப்பவர்.
எதற்காக மோகன்லால் படத்தை எதிர்க்கிறார் என்றால்,, மகாபாரதம் என்கிற டைட்டிலை இந்தப்படத்துக்கு வைக்க கூடாதாம்.. காரணம் இந்தப்படத்திற்கான கதையாக எழுதப்பட்ட 'ரண்டமூழம்' நாவலே, மகாபாரதத்தில் இல்லாத சில நிகழ்வுகளை இட்டுக்கட்டி, பீமனின் கேரக்டரை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கிறது.. அப்புறம் எப்படி இதற்கு மகாபாரதம் என டைட்டில் வைத்தார்கள்.. அதை உடனே மாற்றவேண்டும்.. அப்படி இந்தப்படம் தயாராகி, 'மகாபாரதம்' டைட்டிலுடன் வெளியானால் அந்தப்படத்தை தியேட்டர்களில் திரையிட விடமாட்டோம் என எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளார் இந்த சசிகலா.