டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் தாடி பாலாஜி. தற்போது விஜய் டி.வியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இவருக்கும், நித்யாவுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு போர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில வருடங்களாகவே தாடி பாலாஜிக்கும், நித்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு தன் கணவர் தன்னை தினமும் குடித்துவிட்டு வந்து அடித்து உதைப்பதாக நித்யா ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார். ஆனால் பாலாஜி நாங்கள் ஒற்றமையாகத்தான் இருக்கிறோம் என்று இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோவுடன் இன்னொரு பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார்.
இந்த நிலையில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, மாதவரம் போலீசில் நேற்று கணவர் மீது புகார் மனு அளித்தார். அதில் தன் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், ஜாதி பெயரைச் சொல்லி திட்டுவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புகார் மனுவில் உண்மை இருக்கும் பட்சத்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.