பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுக்க பேசப்படும் ஒரு நடிகர் ரஜினி. ரஜினிக்கு அரசியல் ஆசை இருக்கிறது, அதோடு கொஞ்சம் பயமும் இருக்கிறது. அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என ரஜினி உறுதியாக இதுவரை சொல்லவில்லை. ஆண்டவன் கட்டளையிட்டால் நிச்சயம் அரசியலிலும் களம் புகுவேன் என்று கூறி வருகிறார். ஆனால் கடந்தவாரத்தில் ரசிகர்களை சந்தித்தபோது அரசியல் விஷயத்தில் ரஜினி பேச்சில் பெரிய மாற்றம் தெரிகிறது. தான் விரைவில் அரசியலுக்கு வருகிறேன் என் சூசமாக சொல்லிவிட்டார்.
ரஜினியின் அரசியல் அடிதளத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண பொது மக்கள் வரை ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளம், டிவி.,க்களில் ஒரு பெரிய விவாதமே நடந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் ரஜினிக்கு நடிகர் தாமு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தாமு கூறியிருப்பதாவது... "ரஜினிகாந்தின் எதிர்ப்பு அலைதான் ரஜினிகாந்தின் அரசியல் பலமாக மாறும். இப்போது எதிர்ப்பவர்களை எல்லாம் ரஜினி எதிர்க்கமாட்டார். ஆனால் அவர்களைப் பற்றி பேசுவார். அது மக்களை கவரும். இதுவரை யாரும் பின்பற்றாத அரசியல் பாணியில் வெற்றி உலா வருவார். எல்லா கட்சிகளும் ஒரு நாள் ரஜினியை எதிர்ப்பதை குறைத்துக் கொள்வார்கள். காரணமே இல்லாமல் மக்கள் இவர் பின்னால் நிற்பார்கள். அது ஏன் எப்படி என்று மற்றவர்கள் புரிந்துக் கொள்வதற்குள் ரஜினி மக்களை நோக்கி கவரப்படுவார். மக்கள் தொண்டனாக உணரப்படுவார்".
இவ்வாறு தாமு கூறியுள்ளார்.