ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியத் திரையுலகில் இதுவரை வெளிவந்திராத பிரம்மாண்டமான படம் என்ற பெயரைப் பெற்ற 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் 1500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி நான்காவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூல் 2000 கோடியைத் தாண்டுமா என திரையுலகத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆமீர்கானின் 'தங்கல்' படத்தின் வசூல் 'பாகுபலி 2' வசூலை முறியடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
சீனாவில் வெளியாகி இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'தங்கல்' படத்திற்கு அங்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நேற்று வரை சுமார் 745 கோடி வவரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் 'தங்கல்' படத்தின் உலக வசூல் 1500 கோடியைத் தாண்டியுள்ளது.
'பாகுபலி 2' படத்தின் வசூலை முறியடிக்க இனி வேறு ஒரு புதிய படமாவது வருமா என்று பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில் இதற்கு முன் வெளிவந்த 'தங்கல்' படமே அந்த சாதனையை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.