தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வட இந்திய சேனல்களில் பிரபலமான நிகழ்ச்சி கோன் பனேகா குரோர்பதி. இந்த நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிக் பி-ஆன அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கினார். இதே நிகழ்ச்சி பிராந்திய மொழிகளில் அந்தந்த மொழி ஸ்டார்கள் நடத்தினார்கள். இருந்தாலும் அமிதாப் நடத்திய அளவுக்கு பெரிய அளவில் ரீச்சாகவில்லை. தற்போது குரோர்பதி சீசன்-9 நிகழ்ச்சி உருவாக இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை அமிதாப்பிற்கு பதிலாக அவரது மருமகளான ஐஸ்வர்யா ராய் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஐஸ்வர்யா ராயிடம் பேசி வருகின்றனர். ஆனால் இன்னும் உறுதியாகவில்லை. ஒருவேளை ஐஸ்வர்யா ராய் மறுப்பு சொல்லிவிட்டால் அவருக்கு பதிலாக மாதுரி தீட்சித்தை வைத்து நிகழ்ச்சி பண்ண இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அநேக ரசிகர்கள், அமிதாப்பையே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சொல்லி கூறி வருகிறார்களாம். ஆனால் தயாரிப்பு தரப்போ புதியவர்களை கொண்டு வரும் எண்ணத்தில் இருக்கிறதாம். குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கபோவது அமிதாப்பா, ஐஸ்வர்யாவா அல்லது மாதுரியா...? யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.