ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
வட இந்திய சேனல்களில் பிரபலமான நிகழ்ச்சி கோன் பனேகா குரோர்பதி. இந்த நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிக் பி-ஆன அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கினார். இதே நிகழ்ச்சி பிராந்திய மொழிகளில் அந்தந்த மொழி ஸ்டார்கள் நடத்தினார்கள். இருந்தாலும் அமிதாப் நடத்திய அளவுக்கு பெரிய அளவில் ரீச்சாகவில்லை. தற்போது குரோர்பதி சீசன்-9 நிகழ்ச்சி உருவாக இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை அமிதாப்பிற்கு பதிலாக அவரது மருமகளான ஐஸ்வர்யா ராய் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஐஸ்வர்யா ராயிடம் பேசி வருகின்றனர். ஆனால் இன்னும் உறுதியாகவில்லை. ஒருவேளை ஐஸ்வர்யா ராய் மறுப்பு சொல்லிவிட்டால் அவருக்கு பதிலாக மாதுரி தீட்சித்தை வைத்து நிகழ்ச்சி பண்ண இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அநேக ரசிகர்கள், அமிதாப்பையே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சொல்லி கூறி வருகிறார்களாம். ஆனால் தயாரிப்பு தரப்போ புதியவர்களை கொண்டு வரும் எண்ணத்தில் இருக்கிறதாம். குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கபோவது அமிதாப்பா, ஐஸ்வர்யாவா அல்லது மாதுரியா...? யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.