பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் |
அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகிறார் நடிகை கங்கனா ரணாவத். சிம்ரன் பட கதையை தனதாக்கி சொந்தம் கொண்டாடுகிறார் என்று கதாசிரியர் அபூர்வா அஸ்ராணி குற்றம் சாட்டி வரும் வேளையில், அடுத்தப்படியாக பிரபல இயக்குநர் கேத்தன் மேத்தா, கங்கனா மீது கதை திருட்டு புகார் கூறியுள்ளார்.
கங்கனாவும், கேத்தன் மேத்தா இணைந்து ராணி லக்ஷ்மி பாய் படத்தில் பணியாற்ற இருந்தனர். ஆனால் சில காரணங்களால் இந்தப்படத்திலிருந்து விலகிவிட்டார் கங்கனா. இந்நிலையில் கங்கனா, தற்போது கிரிஷ் இயக்கத்தில் மணிகர்னிகா என்ற படத்தில் ராணி லட்சுமி பாய் ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் வாரணாசியில் துவங்கியது. இந்தச்சூழலில் கங்கனாவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் இயக்குநர் கேத்தன் மேத்தா.
இதுகுறித்து கேத்தன் மேத்தா கூறியிருப்பதாவது... "உண்மை தான், கங்கனாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். எனது படத்தையே மொத்தமாக கடத்தி கொண்டு போய்விட்டார். ராணி லட்சுமி பாய் கதையை படமாக்க வேண்டும் என்பது எனது 10 ஆண்டு கனவு. இதற்காக ஏகப்பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு இந்த கதையை தயார் செய்தேன். அப்படி நான் தயார் செய்த ஒட்டுமொத்த கதையையும் மொத்தமாக கங்கனா எடுத்து கொண்டு போய்விட்டார்" என்கிறார்.