மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ஆமீர்கான் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்த 'தங்கல்' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் மட்டும் இந்தப் படம் சுமார் 380 கோடி ரூபாயை வசூலித்தது. உலகம் முழுவதும் சுமார் 700 கோடி ரூபாயை வசூலித்து 'பாகுபலி 2' படம் வெளிவரும் வரை முதலிடத்தில் இருந்தது.
கடந்த மாதம் 28ம் தேதி வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்திய அளவில் வசூலில் முதலிடத்தைப் பிடித்து வைத்திருந்த 'தங்கல்' படத்தின் வசூலை முறியடித்து 400 கோடி ரூபாயைக் கடந்தது. தற்போது 500 கோடி ரூபாயை நோக்கி இப்படத்தின் வசூல் போய்க் கொண்டிருக்கிறது.
இதனிடையே, சீனாவில் வெளியான 'தங்கல்' படம் நல்ல வசூலைப் பெற்று வருவதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் முறையாக ஒரு இந்தியப் படம் சீனாவில் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் 'தங்கல்' படத்தின் வசூல் இந்திய வசூலான 380 கோடி ரூபாயையும் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.
உலக அளவில் 'பாகுபலி 2' படம் 1500 கோடியை நெருங்கியுள்ள நிலையில், 'தங்கல்' படத்தின் சீனா வசூலையும் சேர்த்தால் அந்தப் படம் 1200 கோடியைத் தற்போது தாண்டியுள்ளது.
'பாகுபலி 2' படம் இன்னும் சீனாவில் வெளியாகவில்லை. இந்த வருடக் கடைசியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், 'பாகுபலி' முதல் பாகம் சீனாவில் வெளியான போது பெரிய வசூலை ஈட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.