இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கிட்டத்தட்ட 21 வருட கனவு இன்றுதான் நனவாகி இருக்கிறது மலையாள இயக்குனர் லால் ஜோசிற்கு.. ஆம்.. 1998ல் மம்முட்டி நடித்த ஒரு மருவத்தூர் கனவு' படத்தை இயக்கியபின் அடுத்தது எப்போது மோகன்லால் படத்தை இயக்கப்போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.. இத்தனைக்கும் லால்ஜோசின் குருவான இயக்குனர் கமல் இயக்கிய 'விஷ்ணுலோகம்' படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய லால்ஜோசை பார்த்து இவர் மிகப்பெரிய இயக்குனராக வருவார் என ஆருடம் சொன்னவர்தான் மோகன்லால்.. சொன்னபடியே பெரிய ஆளாக வளர்ந்தும் விட்டார் லால் ஜோஸ்.
ஆனால் ஏனோ தெரியவில்லை இத்தனை நாட்களாக இந்த கூட்டணி ஏனோ சில காரணங்களால் ஒன்று சேரவே முடியாமல் போனது. தற்போது இருவருக்கும் இடையேயான பனித்திரை விலகி, இதோ மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று துவக்கியும் விட்டார் லால் ஜோஸ். கேரளாவில் தும்பாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் தான் படப்பிடிப்பு நடைபெறுகிறது.. இதன் துவக்க நாளான இன்று கல்லூரி முழுவதும் நிறைய மரக்கன்றுகளை நட்டுவைத்து படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இந்தப்படத்தில் மோகன்லால் கல்லூரி ஒன்றின் வைஸ்பிரின்சிபாலாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.