பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கிட்டத்தட்ட 21 வருட கனவு இன்றுதான் நனவாகி இருக்கிறது மலையாள இயக்குனர் லால் ஜோசிற்கு.. ஆம்.. 1998ல் மம்முட்டி நடித்த ஒரு மருவத்தூர் கனவு' படத்தை இயக்கியபின் அடுத்தது எப்போது மோகன்லால் படத்தை இயக்கப்போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.. இத்தனைக்கும் லால்ஜோசின் குருவான இயக்குனர் கமல் இயக்கிய 'விஷ்ணுலோகம்' படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய லால்ஜோசை பார்த்து இவர் மிகப்பெரிய இயக்குனராக வருவார் என ஆருடம் சொன்னவர்தான் மோகன்லால்.. சொன்னபடியே பெரிய ஆளாக வளர்ந்தும் விட்டார் லால் ஜோஸ்.
ஆனால் ஏனோ தெரியவில்லை இத்தனை நாட்களாக இந்த கூட்டணி ஏனோ சில காரணங்களால் ஒன்று சேரவே முடியாமல் போனது. தற்போது இருவருக்கும் இடையேயான பனித்திரை விலகி, இதோ மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று துவக்கியும் விட்டார் லால் ஜோஸ். கேரளாவில் தும்பாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் தான் படப்பிடிப்பு நடைபெறுகிறது.. இதன் துவக்க நாளான இன்று கல்லூரி முழுவதும் நிறைய மரக்கன்றுகளை நட்டுவைத்து படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இந்தப்படத்தில் மோகன்லால் கல்லூரி ஒன்றின் வைஸ்பிரின்சிபாலாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.