'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்ற அமைப்பு ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்ற புதிய அமைப்பு நேற்று துவக்கப்பட்டது. இதன் தலைவராக அபிராமி ராமநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தற்போது விஷால் தலைமையில் செயல்பட்டு வரும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டி அணியாக துவக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அபிராமி ராமநாதன் கூறியதாவது:
இந்த சங்கம் வேறு எந்த சங்கத்திற்கு போட்டியாகவோ, யாருக்கும் எதிராகவோ தொடங்கப்படவில்லை. பல வருடங்களாக பலரின் சிந்தனையில் இருந்தது இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை 4 மாநிலங்களுக்காக செயல்படுகிறது. தமிழ் மொழிக்கென்று உருவாகும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ளத்தான் இந்த சங்கத்தை உருவாக்கி உள்ளளோம். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு இடையே இணக்கத்தையும், நல்லுறவையும் ஏற்படுத்த இந்த அமைப்பு பாடுபடும். மற்ற அமைப்புகளில் செயல்பாட்டில் ஒரு போதும் தலையிடாது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இருந்தாலும் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் தனித்தனியாக வர்த்தக சபைகள் தொடங்கி உள்ளார்கள். அதனால் தமிழ்நாட்டுக்கென்று நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இதன் தலைவராக நான் எல்லோராலும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். விரைவில் மற்ற நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். இதன் துவக்க விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம் என்றார் அபிராமி ராமநாதன்.