டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வடஇந்திய சினிமாவை அமீர்கான், ஷாரூக்கான், சல்மான்கான் போன்ற கான்கள் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். என்றாலும் அவர்கள் வடஇந்திய நடிகர்கள், இந்தி நடிகர்கள் என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் தற்போது இந்திய அளவில் புகழ்பெற்று இந்திய ஸ்டார் நடிகராகி விட்டார்.
அதோடு, இந்தியாவிலுள்ள பல முன்னணி நடிகைகளும் பிரபாசுடன் நடிக்க ஆர்வமாக இருப்பதோடு, அவரது ரசிகைகளாகவும் மாறி வருகின்றனர். அந்தவகையில், பிரபல பாலிவுட் நடிகையான ஆலியாபட், பாகுபலி-2 படத்திற்கு பிறகு பிரபாசின் ரசிகையாகி விட்டாராம். அதையடுத்து அவர் அளித்துள்ள பேட்டியில், இதுவரை தென்னிந்தியாவில் என்னை எந்த நடிகரும் கவரவில்லை. முதன்முதலாக பிரபாஸ் எனக்கு பிடித்தமான நடிகராகியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.