மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
திரைப்படங்கள் 100 நாட்கள் ஓடினால் அதனை கொண்டாடுவதைப்போல இப்போது ஒரு தொலைக்காட்சி தொடரும் 100 எபிசோடை தாண்டினால் பெரிய சாதனையாக கொண்டாடப்படுகிறது. காரணம் இந்த 100 எபிசோட்கள்தான் சீரியலின் பரிசோதனைக் காலம். முதல் 100 எபிசோட்களை தக்க வைத்து விட்டால் அதாவது டி.ஆர்.பி இறங்காமல் பார்த்துக் கொண்டால் அது சீரியலின் வெற்றியாக கருதப்படுகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீலி தொடர் 100 எபிசோட்களை கடந்துள்ளது. அதை அதன் கலைஞர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் 12ந் தேதி முதல் ஒளிபரப்பை தொடங்கிய நீலி தொடரை சி.ஜெரால்டு இயக்குகிறார். சவி, நவீன், நிரஞ்சனி, திவ்யா, கவிதா, ரேகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இது இறந்து போன ஒரு தாய், தன் மகளை ஆவியாக இருந்து பாதுகாக்கிற கதை. குழந்தை பாசம், ஆவி செண்டிமெண்ட் கலந்து ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 100 எபிசோட்களை கடந்திருக்கிறது. இதனை அதில் நடித்த நடிகர் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.