தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது சின்னத்திரைகளில் கல்யாண பரிசு , ராஜா ராணி, பூவே பூச்சூடவா ஆகிய தொடர்களில் நடித்து வருபவர் ஸ்ரீதேவி. எதிர்காலத்தில் சிஐடி ஆக வேண்டும என்பதுதான் எனது ஆசை. அதனால் எம்எஸ்சி கிரிமினாலஜி படித்து வருகிறேன் என்கிறார் அவர்.
மேலும் ஸ்ரீதேவி கூறுகையில், நான் 2008ல் சின்னத்திரையில் நடிக்க வந்தேன். முதலில் தெலுங்கில் இரண்டு சீரியல்களில் நடித்த பிறகு, செல்லமடி நீ எனக்கு தொடர் மூலம் தமிழுக்கு வந்தேன். பின்னர், தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், வாணி ராணி என பல தொடர்களில் நடித்தேன். பாசிட்டிவ், நெகடீவ் என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்திருக்கிறேன். என்றாலும், நெகடீவ் வேடங்கள்தான் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தன.
இப்போதுகூட கல்யாண பரிசு, ராஜாராணி தொடர்களில் நெகடீவ் ரோல்களில்தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த மாதிரி தொடர்களில் எனது நடிப்பு பெரிய அளவில் பேசப்படுவதால் நெகடீவ் கதாபாத்திரங்கள் மீது எனக்கான ஈடுபாடு அதிகரித்து விட்டது.
மேலும், படிப்பில் எனக்கு ஆர்வம் மிகுதி என்பதால் நடித்துக்கொண்டே படித்து வரும் நான், எதிர்காலத்தில் சிஐடி ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் தற்போது எம்எஸ்சி கிரிமினாலஜி படித்து வருகிறேன். அதுதவிர, பெட் அனிமல் துறையிலும் ஒர்க் பண்ணிக்கொண்டிருக்கிறேன். அது எனக்கு நல்ல பொழுதுபோக்காகவும் உள்ளது என்று கூறும் ஸ்ரீதேவிக்கு, சினிமாவில் நடிக்கும் ஆசையெல்லாம் இல்லையாம். சீரியலில் நடிப்பது, படிப்பதற்கே நேரம் போதுமானதாக உள்ளது என்கிறார்.