'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். தமிழ்நாட்டை சுனாமி தாக்கியபோது ஓடோடி வந்து உதவி செய்த முதல் பாலிவுட் நடிகர். அதேபோன்று தற்போது சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் துப்பாக்கி சண்டையில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 25 வீடுகள் வழங்கி உள்ளார்.
விவேக் ஓபராய், ஓபராய் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மகாராஷ்டிராவில் நடத்தி வருகிறார், இந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனைக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளிலிருந்து 25 வீடுகளை வழங்கி உள்ளார்.
சட்டீஷ்கர் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த சம்பவத்தில் உயிர் தியாகம் செய்த 4 எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக வீடுகள் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 21 வீடுகள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு வீடும் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை விலை உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.