இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். தமிழ்நாட்டை சுனாமி தாக்கியபோது ஓடோடி வந்து உதவி செய்த முதல் பாலிவுட் நடிகர். அதேபோன்று தற்போது சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் துப்பாக்கி சண்டையில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 25 வீடுகள் வழங்கி உள்ளார்.
விவேக் ஓபராய், ஓபராய் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மகாராஷ்டிராவில் நடத்தி வருகிறார், இந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனைக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளிலிருந்து 25 வீடுகளை வழங்கி உள்ளார்.
சட்டீஷ்கர் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த சம்பவத்தில் உயிர் தியாகம் செய்த 4 எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக வீடுகள் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 21 வீடுகள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு வீடும் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை விலை உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.