இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான இயக்குநர் ராம் கோபால் வர்மா. படங்களை விட டுவிட்டரில் விமர்சனம் என்ற பெயரில் இவர் கிளப்பும் சர்ச்சை தான் மிகவும் பிரபலம். தற்போது இவர், அமிதாப் பச்சனை வைத்து சர்கார்-3 படத்தை இயக்கியுள்ளார். இந்தவாரம் வெளியாக உள்ள சர்கார் 3 பற்றியும், தன்னைப்பற்றியும் அவர் அளித்த சுவாரஸ்ய பேட்டி இதோ...
சர்கார்-3யில் என்ன சொல்ல போகிறீர்கள்.?
நான் எப்போதும் யதார்த்தமான படங்களை தான் எடுப்பேன், அதனால் தான் என்னுடைய படங்களுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. சர்கார் 3 படமும் ஒரு யதார்த்தமான படம் தான். முந்தைய இரண்டு பாகங்களும் அமிதாப்பின் சுபாஷின் கேரக்டரை மையமாக வைத்து தான் உருவாகி இருந்தது. அதேப்போல் தான் சர்கார் 3 படத்தின் கதையும் அமிதாப் பச்சனை சுற்றி தான் நகரும்.
சர்கார் 3 படம் பால் தாக்ரே மற்றும் அவரது பேரன் ஆதித்யா தாக்ரேயின் கதையா.?
இல்லை, முற்றிலும் தவறான தகவல். சர்கார் 3 படத்திற்கும் பால்தாக்ரே குடும்பம் மற்றும் சிவசேனா கட்சி உள்ளிட்ட எதற்கும் சம்பந்தம் கிடையாது. அதேப்போல் மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியலை பற்றியும் பேசவில்லை.
சர்கார்-3யில் யாமி கவுதமை தேர்வு செய்தது ஏன்.?
என் கதைக்கு என்ன தேவையோ அதை பொறுத்தான் நடிகர், நடிகையரை தேர்வு செய்வேன். பேர் அண்ட் லவ்லி விளம்பரத்தில் தான் யாமியை பார்த்தேன், அவ்வளவு அழகாக இருந்தார். ஒரு அப்பாவி பெண் போன்ற தோற்றம் அவரது முகத்தில் தெரிந்தது. ரசிகர்களுக்கும் அப்படி ஒரு பெண்ணை தான் காண்பிக்க நினைத்தேன். ஆகையால் அவரை தேர்வு செய்தேன்.
எப்போதுமே ஏதாவது சர்ச்சையான டுவீட் செய்வது ஏன்.?
சிரிக்கிறார்...! எனக்கு அப்படி டுவீட் செய்ய பிடித்திருக்கிறது, என்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்று விரும்புவேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் யாரும் என்னுடைய டுவீட்டை புரிந்து கொள்வது கிடையாது, யாரும் அவர்களது மூளையை பயன்படுத்துவது கிடையாது. இல்லை என்னையாவது தொடர்பு கொண்டு என்ன... ஏது...? நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கேட்பது கிடையாது.
அமிதாப் பச்சன் உடன் நிறைய படங்களில் பணியாற்றிவிட்டீர்கள், அவரது மகன் அபிஷேக் பற்றி சொல்லுங்க.?
அபிஷேக் நல்ல திறமையான நடிகர். அவர் பிக் பி என சொல்லப்படும் அமிதாப்பின் மகன் என்பதால் ரசிகர்கள் அவரிடத்தில் நிறைய எதிர்பார்க்கிறார்கள். என்னை பொறுத்தமட்டில் அவர் யதார்த்தமான படங்களில் தான் நடிக்க வேண்டும், அது தான் அவருக்கு சரி வரும், ரசிகர்களும் அதை தான் விரும்புவார்கள். உதாரணத்திற்கு அவர் நடித்த சர்கார், யுவா, குரு போன்ற படங்கள் எல்லாம் யதார்த்த படங்கள், அதனால் தான் அந்த படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகின.
உங்கள் வாழ்க்கையை யாராவது படமாக்க விரும்பினால் நீங்கள் எதிர்ப்பீர்களா..?
நிச்சயமாக நான் எதிர்க்க மாட்டேன். என் வாழ்க்கையை யாரும் படமாக்க விரும்பமாட்டார்கள். அப்படியே யாராவது படமாக்க முன்வந்தால், இந்த உலகத்தில் என்னைப்போன்று மற்றுமொரு முட்டாள் இருக்கிறான் என்று நினைப்பேன்.