ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
நடிகை பிரியங்கா சோப்ரா பல்வேறு பிராந்திர மொழி படங்களை தயாரித்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது, நளினி என்ற பெங்காலி - மராத்தி மொழிகள் கலந்த படம் ஒன்றை தயாரிக்க உள்ளாராம். இப்படம் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அன்னபூர்ணா இடையேயான காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது. 1878 ம் ஆண்டுகளில் தாகூர் 17 வயது இளைஞராக மும்பையில் டாக்டர்.அட்மாராம் பதுராங்குடன் வசிப்பது போல் கதை துவங்குகிறது. அட்மாராமின் 20 வயது மகள் அன்னபூர்ணா. இவருக்கும் தாகூருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.
தாகூரின் வாழ்க்கை படத்தை பிரியங்கா தயாரிக்க உள்ளதை அவரது தாயார் உறுதிப்படுத்தி உள்ளார். பிரியங்காவின் தாயார் மது சோப்ரா இத குறித்து கூறுகையில், நல்ல கதைகள் ரசிகர்களிடம் போய் சேர வேண்டும் என பிரியங்கா விரும்புகிறார். நளினி படம் உணர்வுப்பூர்வமான அதே சமயம் பொழுதுபோக்கு கதை. இப்படத்தில் நாங்களும் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார். நளினி படம் இந்தியிலும் டப் செய்யப்பட உள்ளது.