பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
பாகுபலி-2' படம் வெளியாந சில நாட்களிலேயே பாகிஸ்தான் ரசிகர்களிடமும் அந்த படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதனால் அந்தப்படத்தை பாகிஸ்தானிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பாகிஸ்தானில் இருந்து நிறைய ரசிகர்கள் 'பாகுபலி-2'வை இந்தியில் வெளியிட்ட பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள்... ஆனால் இதற்கு முன்பு சில பாலிவுட் படங்களை பாகிஸ்தானில் திரையிட எதிர்ப்பு கிளம்பியதால், இந்தியில் 'பாகுபலி-2'வை ரிலீஸ் செய்த கரண் ஜோகர், இந்தப்படத்தை பாகிஸ்தானில் ரிலீஸ் பண்ணுவது குறித்து ஆர்வம் காட்டாமல் இருந்தார்..
இந்நிலையில் பாகிஸ்தானில் 'பாகுபலி-2' ரிலீஸாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.. இந்தியாவை போலவே பாகிஸ்தானிலும் 'பாகுபலி-2'வை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் க்யூ வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி செல்வதை ஒரு பாகிஸ்தான் ரசிகர் படம் பிடித்து போட்டுள்ளார். குறிப்பாக லாகூர், கராச்சி ஆகிய பகுதிகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம் 'பாகுபலி-2'.