'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகுபலி-2' படம் வெளியாந சில நாட்களிலேயே பாகிஸ்தான் ரசிகர்களிடமும் அந்த படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதனால் அந்தப்படத்தை பாகிஸ்தானிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பாகிஸ்தானில் இருந்து நிறைய ரசிகர்கள் 'பாகுபலி-2'வை இந்தியில் வெளியிட்ட பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்கு கோரிக்கை வைத்திருந்தார்கள்... ஆனால் இதற்கு முன்பு சில பாலிவுட் படங்களை பாகிஸ்தானில் திரையிட எதிர்ப்பு கிளம்பியதால், இந்தியில் 'பாகுபலி-2'வை ரிலீஸ் செய்த கரண் ஜோகர், இந்தப்படத்தை பாகிஸ்தானில் ரிலீஸ் பண்ணுவது குறித்து ஆர்வம் காட்டாமல் இருந்தார்..
இந்நிலையில் பாகிஸ்தானில் 'பாகுபலி-2' ரிலீஸாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.. இந்தியாவை போலவே பாகிஸ்தானிலும் 'பாகுபலி-2'வை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் க்யூ வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி செல்வதை ஒரு பாகிஸ்தான் ரசிகர் படம் பிடித்து போட்டுள்ளார். குறிப்பாக லாகூர், கராச்சி ஆகிய பகுதிகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம் 'பாகுபலி-2'.