அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நேற்றைய தினம் (மே-5) நடிகர் துல்கர் சல்மானுக்கு மறக்க முடியாத ஒரு தினமாக அமைந்துவிட்டது. அவர் நடிப்பில் உருவான 'காம்ரேட்ஸ் இன் அமெரிக்கா' படம் நேற்று காலை ரிலீஸானது ஒருபக்கம் சந்தோசம் என்றால், துல்கரும் அவரது குடும்பத்தினரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த தருணமும் நேற்றுதான் நிகழ்ந்தது. ஆம், சென்னை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த துல்கரின் மனைவி அமல் சுபியா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆம், துல்கர் அப்பாவாகி விட்டார். மம்முட்டி தாத்தாவாகி விட்டார்.
கடந்த சில நாட்களாகவே தனது மனைவியின் பிரசவ நாளை, தங்கள் வீட்டிற்கு ஒரு புதிய வரவு ஒன்று வரப்போகும் நாளை எதிர்பார்த்துக்கொண்டே தான், தனது பட ரிலீஸ் வேளைகளில் ஈடுபட்டு வந்தார் துல்கர் சல்மான்.. இந்த இரண்டும் ஒரே நாளில் நிகழ்ந்துள்ளது ஆச்சர்யமான ஒன்றுதான். தனது வீட்டிற்குள் அழகான தேவதை, சொர்க்கத்தின் ஒரு துளி வந்துள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் துல்கர் சல்மான்.
2௦11 டிசம்பரில் சென்னையை சேர்ந்த வட இந்திய முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த அமல் சுபியாவுக்கும் துல்கருக்கும் திருமணம் நடைபெற்றது. இப்போது சுமார் ஐந்து வருடம் கழித்து முதல் குழந்தை பிறந்துள்ளது. அமல் சுபியா குழந்தை பிறந்ததை கேள்விப்பட்டு, மருத்துவமனையில் காத்திருந்த மம்முட்டி, நஸ்ரியா, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் துல்கர் சல்மானுடன் தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.