ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
பாலிவுட்டின் பிக் பி என போற்றப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். தற்போது, இவர், ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சர்கார் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமான சர்கார்-3 படத்தில் நடித்துள்ளார். இப்படம் முடிந்து அடுத்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில் சர்கார்-3 படம் பற்றி, அமிதாப் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியிருக்கிறது. சர்கார்-3 படத்தில் அமிதாப் பச்சன் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அதுவும் கடவுள் கணபதியை துதி பாடும் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இதற்காக மும்பையில் உள்ள கடற்கரையில் பெரிய செட்டு அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகள் எல்லாம் வைத்து பாடலை படமாக்கியுள்ளனர்.
இதுப்பற்றி அமிதாப் கூறியிருப்பதாவது... "சர்கார்-3 படத்தில் கணபதி பாடல் பாடியிருக்கிறேன். இப்படியொரு பாடலை பாடியிருப்பதன் மூலம் கடவுளால் நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். மும்பை சித்தி விநாயகர் கோயிலில் இடம்பெறும் கணபதி பாடல் போன்று இந்தப்பாடல் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். இதுப்பற்றி ராம் கோபால் வர்மாவிடம் பேசியபோது அவரும் கண்டிப்பாக செய்வோம் என்றார். நிச்சயம் இந்தப்பாடல் வேறு ஒரு தளத்தில் பக்தியுடன், சென்ட்டிமென்ட்டாக, உருக வைக்கும் பாடலாக இருக்கும்" என்றார்.