பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கரண் ஜோகர் இயக்கத்தில் 2012-ம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ஸ்டூடண்ட் ஆப் தி இயர். இப்படத்தின் மூலம் தான் வருண் தவான், சித்தார்த் மல்கோத்ரா, ஆலியா பட் ஆகியோர் சினிமாவில் அறிமுகமாகினர். தற்போது இவர்கள் பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இதில், டைகர் ஷெரப் ஹீரோவாக நடிக்க, புனித் மல்கோத்ரா இயக்க, கரண் ஜோகர் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வந்தது. ஆனால், ஸ்டூடண்ட் ஆப் தி இயர்-2 இப்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் டைகர்.
இதுகுறித்து டைகர் ஷெரப் கூறியிருப்பதாவது... "தற்போது நான் முன்னா மைக்கேல் படத்தில் நடித்துள்ளேன். இதன் புரொமோஷன் வேலைகள் முடிந்ததும், அடுத்தப்படியாக பாகி-2 படத்தில் நடிக்கிறேன். ஜூன் அல்லது ஜூலையில் இப்படம் ஆரம்பமாக இருக்கிறது. பாகி-2 படத்திற்காக சீனா சென்று பயிற்சி எடுக்க உள்ளேன் என்று கூறியவர், ஸ்டூடண்ட் ஆப் தி இயர்-2 படம் பற்றி பேசுகையில், தற்போதைக்கு அந்தப்படம் உருவாகவில்லை, தள்ளி வைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.