சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ரஜினியுடன் நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்தபோது பெரிய அளவில் பேசப்பட்டவர் ரம்யா கிருஷ்ணன். அதன்பிறகு அந்த கேரக்டரை மிஞ்சும் வகையிலான கதாபாத்திரங்கள் அவருக்கு அமையவில்லை. ஆனால், ராஜமவுலியின் பாகுபலியில் அவருக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ள சிவகாமி என்ற கதாபாத்திரம் அவரை புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
குறிப்பாக, சமீபத்தில் வெளியாகியுள்ள பாகுபலி-2 படத்தில் அவரது நடிப்பு குறித்து இந்தியாவிலுள்ள பல முன்னணி நடிகைகளும் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்தநிலையில், நடிகை குஷ்புவும் ரம்யாகிருஷ்ணனின் நடிப்பை பாராட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், என் அடிமனதில் இருந்து உன்னை நான் வெறுக்கிறேன். இப்படி நான் சொல்வதற்கு என்ன காரணம் என்று உனக்கே தெரியும் என் ஸ்வீட் ஹார்ட். நான் வெளிநாடு சென்று வந்ததும், உன்னை சந்திக்கிறேன் என்று தனது தோழி ரம்யா கிருஷ்ணனை பாராட்டியுள்ளார் குஷ்பு.