டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராடன் டிவி மேலாளருடன் வாணி ராணி தொடரில் நடித்து வரும் நடிகை சபீதா ராய் நடுரோட்டில் குடுமி பிடி சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ராடன் மீடியா நிறுவனத்தில் மேலாளராக இருப்பவர் சுகுமாறன். இதே போன்று இந்த நிறுவனம் தயாரிக்கும் சீரியலான வாணி ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சபீதா ராய். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருப்பதாக கூறப்படுகிறது. சபீதா ராயிடம் ரூ.20 ஆயிரம், சுகுமாறன் கடன் வாங்கியிருப்பதாகவும், இதுதொடர்பாக சுகுமாறனிடம் சபீதா கேட்டிருக்கிறார். சுகுமாறனும் அந்தா தருகிறேன், இந்தா தருகிறேன் என்று இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த அன்று சுகுமாறன், பணத்தை தருவதாக சொல்லி சபீதாவை வீட்டுக்கு வரச் சொல்லியதாக சபீதா தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் வந்த இடத்தில் பணத்தை தராமல் சுகுமாறன் இழுத்தடித்ததன் காரணமாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இது ஒரு கட்டத்தில் கை கலப்பு வரை செல்ல ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் இருவருக்குமே லேசான காயம் ஏற்பட்டது. சண்டையில் சுகுமாறனின் சட்டை கிழிந்தது.
ஆனால் இந்த சம்பவத்தை சிலர் வேறுவிதமாக திரித்து கூறிவிட்டதாக சபீதா வருத்தப்படுகிறார். அதாவது, இருவருக்கும் இடையில் கள்ளக்காதல், அப்படி, இப்படி என்று செய்தி வௌியாகி விட்டது. ஆனால் சபீதாவோ, சுகுமாறன், தனக்கு தந்தை போன்றவர் என்றும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை தான். இருவரும் சண்டை போட்டது உண்மை தான். ஆனால் சிலர் தவறாக செய்தி பரப்பியதால் இப்போது என்னை அந்த சீரியலில் இருந்து நீக்கிவிட்டனர், என் சினிமா வாழ்க்கையே கேள்விகுறியாகிவிட்டது. இந்த செய்தியின் மூலமாக இரண்டு குடும்பத்தின் வாழ்க்கையில் பிரச்னை உண்டாகிவிடும், எனக்கு நேர்ந்த செயல் வேறு யாருக்கும் ஏற்பட கூடாது என்று மிகுந்த வருத்தத்துடன் கூறியுள்ளார் சபீதா.