'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஹர ஹர மகாதேவகி பாடல் ஹிட்டக்குப்பிறகு 11 படங்களில் பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார் பாடலாசிரியர் சொற்கோ. அதில், சத்ரு படத்தில் காவல்துறையினரின் பெருமைகளை, தியாகங்களை சொல்லும் வகையில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.
அதுகுறித்து சொற்கோ கூறுகையில், ஹர ஹர மகாதேவகி பாடல் ஹிட்டுக்குப் பிறகு நான் கவனிக்கப்படும் பாடலாசிரியராகி விட்டேன். மாறுபட்ட சூழலுக்கு பாடல் எழுத என்னை அழைக்கிறார்கள். அந்த வகையில், கர்ஜனையில் திரிஷாவுக்காக காதல் பாடல் எழுதியுள்ள நான், பொட்டு, திருப்பதிசாமி குடும்பம் படங்களைத் தொடர்ந்து சத்ரு படத்தில் காவல்துறையினரின் தியாகங்களை சொல்லும் சூழலுக்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.
அச்சம் நீக்கி காக்கும் கண்கள் -என தொடங்கும் அந்த பாடலை எழுதியது பெருமையாக உள்ளது. காவலர்களின் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை சொல்லும் அந்த பாடலில் அவர்களின் பெருமைகள் மட்டுமின்றி, தியாகங்கள், அர்ப்பணிப்பை சொல்லியிருக்கிறேன். இந்த பாடல் வெளியாகும்போது காவ லர்களை குறை சொல்பவர்கள்கூட அவர்களின் தியாக வாழ்க்கையை நினைத் துப் பார்க்கும்போது கண் கலங்குவார்கள். அந்த அளவுக்கு இந்த பாடலின் சரணங்களில் அவர்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை உருக்கமாக சொல்லியிருக்கிறேன். இந்த மாதிரி வாழ்வியலை சொல்லும் பாடல்களை எழுதுவது மனதுக்கு நிறைவாக உள்ளது. அதேசமயம் இது என்னை பெருமைப்படுத்தும் பாடலாகவும் இருக்கும் என்கிறார் சொற்கோ.