ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தான் நடித்த சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்த தனுஷ், ப.பாண்டி படத்தில் இயக்குனராக உருவெடுத்தார். அதோடு, ராஜ்கிரணை கதையின் நாயகனாக நடிக்க வைத்து ப்ளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே தனுஷ் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதையடுத்து திரையுலக இயக்குனர்கள் பலரும் தனுஷை பாராட்டினர். இன்னும் சிலர், உடனடியாக ப.பாண்டி அடுத்த பாகத்தையும் எடுக்குமாறும் அவரை கேட்டுக்கொண்டனர்.
ஆனால், தனுஷின் மாமனார் ரஜினி மட்டும், இந்த படத்தின் வெற்றியைப் பார்த்து உடனடியாக அடுத்த படவேலைகளில் தனுஷ் இறங்கிவிடக்கூடாது. அடுத்தபடியாக நீங்கள் நடிப்பதில் கவனத்தை திருப்ப வேண்டும். இன்னும் சில ஆண்டுகளுக்குப்பிறகுதான் அடுத்த படம் இயக்குவது பற்றி யோசிக்க வேண் டும் என்று தனுசுக்கு ஆலோசனையை வழங்கினார். அதை ஏற்ற தனுசும், ப.பாண்டி-2 இப்போது இல்லை. இன்னும் சில ஆண்டுகளுக்குப்பிறகுதான் அந்த படத்தை இயக்குவது பற்றி முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார்.