அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இந்திய சினிமாவின் பிரமாண்டம் பாகுபலி. முதல் பாகம் வெளிவந்து சரித்திர சாதனை படைத்தது. தற்போது இரண்டாம் பாகம் அதையும் முறியடித்து வருகிறது. பாகுபலி முழுக்க முழுக்க கற்பனை கதை. புராணத்திலிருந்தோ, சரித்திர நிகழ்வுகளிலிருந்தோ தழுவப்பட்டதல்ல. பாகுபலி கதையை எழுதியவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத்.
பாகுபலியின் கதை சுருக்கம் இதுதான்: மகிழ்மதி தேசத்தின் ராஜா மாதா சிவகாமி தேவி. தான் பெற்ற மகன் பல்வாள் தேவனையும், வளர்ப்பு மகன் பாகுபலியையும் ஒன்றாக வளர்க்கிறார். திறமையானவன் என்கிற அடிப்படையில் பாகுபலியை மகிழ்மதியின் மன்னராக்குகிறார். இது பிடிக்காத பெற்ற மகனான பல்வாள் தேவன் சதி செய்து நாட்டை கைப்பற்றி பாகுலியை கொல்கிறார். சிவகாமி தேவியை கொல்ல முயற்சிக்கிறார். ஆனால் பாகுபலியின் மகனோடு தப்பிக்கிறாள் சிவகாமி தேவி, அவர் இறந்து விட அந்த குழந்தையை மலைவாழ் மக்கள் எடுத்து வளர்க்கிறார்கள். பாகுபலியின் மனைவி தேவசேனா தன் ஆசைக்கு இணங்காததால் அவளை அடிமையாக்கி வைத்திருக்கிறான் பல்வாள் தேவன்.
மலைவாழ் மக்களிடம் வளரும் பாகுபலியின் மகன் அமரேந்திர பாகுபலி, தன் காதலி அவந்திகாக மூலம் மகிழ்மதி தேசம் பற்றி அறிகிறான். அடிமை தளபதி கட்டப்பா மூலம் தன் முன் கதை அறிகிறார். அதன் பிறகு அமரேந்திர பாகுபலி, மக்கள் துணையுடன் பல்வாள் தேவனை வீழ்த்தி மகிழ்மதி தேசத்தின் மன்னன் ஆகிறார். இதுதான் பாகுபலியின் கதை சுருக்கம்.
தற்போது இந்த கதையின் முன் கதையாக சிவகாமி பர்வம் என்ற நாவல் வெளியாகி இருக்கிறது. புராண கதைகளை அடிப்படையாக வைத்து நாவல்கள் எழுதும் பிரபல இந்தி எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன். இவர் எழுதிய அசுரா, டேல் ஆஃப் தி வான்கிஷ்டு நூல்கள் புகழ்பெற்றவை. ஆனந்த் நீலகண்டன் தற்போது பாகுபலி கதையின் பாதிப்பில் அதன் முன் கதையை நாவலாக எழுதியிருக்கிறார்.
நாவல் கதையின் நாயகி சிவகாமி தேவி. மகிழ்மதி தேசத்தின் அமைச்சரின் மகள்தான் சிவகாமி தேவி. அவருக்கு 5 வயது இருக்கும்போது மகிழ்மதி தேசத்து மன்னர், சிவகாமியின் தந்தை மீது ராஜா துரோக குற்றச்சாட்டை சொல்லி மகள் கண்முன்னே தந்தையை கொல்கிறார். 5 வயது சிறுமி சிவகாமி நாடு கடத்தப்படுகிறாள். என் தந்தையை கொன்ற மன்னனை வீழ்த்தி மகிழ்மதி தேசத்தின் அரசியாவேன் என்று சூழைக்கிறாள் சிவகாமி. நாடோடிகளால் வளர்க்கப்படும் சிவகாமி தனது 17 வயதில் மகிழ்மதி தேசம் திரும்புகிறாள். அங்கு கொடூர ஆட்சி நடக்கிறது. தான் வாழ்ந்த அரண்மனை சிதைக்கப்பட்டிருக்கிறது. அங்கு செல்லும் அவள் அங்குள்ள ஒரு பெட்டியில் தன் தந்தை ராஜதுரோகி அல்ல என்பதற்கான ஆதாரத்தை கண்டுபிடிக்கிறாள்.
மக்கள் படை திரட்டி புரட்சி செய்து நாட்டை பிடிக்கிறாள். தன் தந்தை ராஜதுரோகி அல்ல என்பதற்கான ஆதாரத்தை மக்களிடம் காட்டுகிறார். மக்கள் நீங்களே எங்கள் அரசியாக இருங்கள் என்று கேட்கிறார்கள். சிவகாமி தேவி மகிழ்மதி தேசத்தின் அரசியாகிறார். இப்படிப் போகிறது நாவலின் கதை. இதன் தொடர்ச்சியாக பாகுபலி கதை அமைகிறது. இந்த நாவலை மீரா ரவிசங்கர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். வேஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது.