ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் வினுசக்கரவர்த்தியின் உடல், சென்னை, போரூரில் உள்ள மின்மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் நடிகர் வினுசக்கரவர்த்தி. தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் 1003 படங்களில் நடித்த வினுசக்கரவர்த்தி, உடல்நலக்குறைவால் நேற்று(ஏப்., 27-ம் தேதி) காலமானார். அவருக்கு திரையுலகினர் சார்பில் சிவகுமார், கார்த்தி, விஷால், பொன்வண்ணன், செந்தில், சரவணன், மயில்சாமி, நெப்போலியன், எஸ்.பி.முத்துராமன், தாமு, சூரி, சங்கிலி முருகன், ஸ்ரீமன், ஒய்ஜி மகேந்திரன், ரோபோ சங்கர், அம்பிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் யாரும் வரவில்லை.
பின்னர் வினுசக்கரவர்த்தியின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சென்னை, போரூரில் உள்ள மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது. வினுசக்கரவர்த்தியின் மகன் சரவணன் இறுதிச்சடங்குகளை செய்தார்.
வினுசக்கரவர்த்தியின் அடையாளமே அந்த கனீர் குரலும், கம்பீரமான தோற்றமும் தான். இனி அந்தக்குரலை யாரும் கேட்க முடியாது, காற்றோடு கலந்து போன அவர், தமிழ் சினிமாவிற்கு நிச்சயம் பேரிழப்பு தான், அவரது இடத்தை இனி ஒருவர் பூர்த்தி செய்வதும் கடினம் தான்.