ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
அனீஸ் பாஸ்மி இயக்கத்தில், சல்மான், அனில் கபூர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த காமெடி படம் நோ என்ட்ரி. இப்படத்தின் இரண்டாம் பாகம் நோ என்ட்ரி மெயின் என்ட்ரி என்ற பெயரில் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுப்பற்றிய அறிவிப்போடு சரி, வேறு எந்த தகவலும் இல்லை. இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதை இயக்குநர் அனீஸ் பாஸ்மி மறுத்துள்ளார்.
இதுகுறித்து அனீஸ் பாஸ்மி கூறியுள்ளதாவது... "நோ என்ட்ரி மெயின் என்ட்ரி படத்தின் கதை சல்மானுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. சல்மான் உடன் எனக்கு நீண்டகால உறவு உள்ளது. இந்தப்படத்தில் சல்மான் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். அப்படியிருக்கையில் இப்படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. முபர்கான் படத்தில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தை சற்று தள்ளி வைக்க வேண்டிய சூழல், தற்போது கதைக்கான இறுதிவடிவத்தை எழுதி வருகிறேன். சல்மானின் கால்ஷீட்டிற்காக காத்திருக்கிறேன், அது கிடைத்ததும் படத்தை ஆரம்பித்து விடுவேன்" என்கிறார்.