ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சினிமாவில் முன்னணி நாயகிகளாக இருந்த பலரும் சமீபகாலமாக சின்னத்திரையில் பிரவேசித்து வருகிறார்கள். ராதிகா, ஊர்வசி, மீனா, ரம்பா, ரம்யா கிருஷ்ணன், ராதா, குஷ்பு, சினேகா என மாஜி நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஆனால், இன்னொரு மாஜி ஹீரோயினான ஜோதிகா இதுவரை எந்த சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றதில்லை. திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து 36 வயதினிலே, மகளிர் மட்டும் படங்களில் நடித்துள்ள ஜோதிகா, அடுத்தபடியாக பாலாவின் நாச்சியார் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், அடுத்த வாரம் விஜய் டிவியின் அன்புடன் டிடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் ஜோதிகா. இதே நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடிகை ரேவதி கலந்து கொண்ட நிலையில், வருகிற சனிக்கிழமை (நாளை) அன்று நடிகை ரம்யா கிருஷ்ணன் கலந்து கொள்கிறார். அதற்கு அடுத்த சனிக்கிழமை அதாவது மே மாதம் 6-ந்தேதி அன்று ஜோதிகா கலந்து கொள்ளும் அன்புடன் டிடி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.