ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் பிரமாண்ட படமான பாகுபலி-2 நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழில் மட்டும் வெளியாகுமா...? ஆகாதா...? என்ற கடைசிநேர டென்சன் நீடித்து வந்தது. ஆனால் இப்போது அந்த டென்சனும் தீர்ந்துள்ளது. பாகுபலி-2 படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
கார்த்திகேயன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் பாகுபலி-2 படத்தை தமிழில் வெளியிடும் கே புரொடக்ஷன்ஸ் தன்னிடம் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.1.48 கோடி செலுத்த வேண்டும், இல்லையேல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், அனைத்து உரிமையையும் முடக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி கூறியதுடன், உரிமை தொடர்பான வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார். இதன்மூலம் பாகுபலி-2 வெளியாவதில் நீடித்த சிக்கல் தீர்ந்தது. திட்டமிட்டப்படி பாகுபலி-2 படம் தமிழில் நாளை வெளியாகிறது.