600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என்கே.விஸ்வநாதனுக்கு கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
1970-களில் ஒளிப்பதிவாளராக களமிறங்கிய என்.கே.விஸ்வநாதன். சட்டம் என் கையில், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, பாண்டி நாட்டு தங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். பிறகு இயக்குநராக இணைந்த கைகள், நாடோடி பாட்டுக்காரன், பெரிய வீட்டு பண்ணக்காரன், பெரிய மருது, ஜெகன் மோகினி போன்ற படங்களையும் இயக்கினார்.
சென்னை வளரசவாக்கத்தில் வசித்து வந்த விஸ்வநாதன் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். சென்னையில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கமல் தவிர்த்து சத்யராஜ், ராமராஜன், செந்தில், சங்கிலிமுருகன், பாண்டியராஜன், சேம்பர் செயலாளர் என்.ராமசாமி, டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், புகழ்மணி, தயாரிப்பாளர் விஜயமுரளி, உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் என்கே விஸ்வநாதனின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மயானத்தில் வைத்து இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது.