'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிறைவாசத்திற்கு பிறகு சஞ்சய் தத் நடித்துள்ள முதல் படம் பூமி. ஓமங் குமார் இயக்கியுள்ளார். அப்பா - மகள் உறவை சொல்லும் பாசப்படமாக இந்த பூமி உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் பூமி படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. இதில் சஞ்சய் தத் தனது ரோல் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கை ஒரே மூச்சாக முடித்து கொடுத்துள்ளார். படத்தின் கடைசிநாள் ஷூட்டிங்கின் போது மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.
இதுகுறித்து பூமி படத்தை தயாரிக்கும் பூஷண் குமார் கூறியிருப்பதாவது... "பூமி படத்திற்காக சஞ்சய் தத் தன் ரோலை அவ்வளவு சிறப்பாக வடிவமைத்து கொண்டார். படத்திற்காக அவர் உழைத்த விதம், அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்" என்றார்.
சஞ்சய் தத் கூறும்போது... "படம் ஆரம்பித்த முதல்நாள் முதல் கடைசி நாள் சிறப்பான அனுபவமாக, நல்ல பயணமாக இருந்தது. படத்தை திரையில் காண ஆவலாய் இருக்கிறேன்" என்கிறார்.
பூமி படம் வருகிற செப்., 22-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.