ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியாவின் குயில் என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். மறைந்த தனது அப்பா தீனாநாத் மங்கேஷ்கர் நினைவாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்கள், சாதனையாளர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறார். இந்த ஆண்டும் மும்பையில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். பாலிவுட் நடிகர் ஆமீர்கான், இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், நடிகை வைஜயந்தி மாலா பாலி ஆகியோருக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டது.
கடந்த 16 ஆண்டுகளாக எந்த பொது மேடையிலும் எந்த விருதையும் பெற்றுக் கொள்ளாதவர் ஆமீர்கான். அரசு தவிர்த்த விருதுகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவந்தார். லதா மங்கேஷகருக்கு மதிப்பளித்து இந்த விழாவில் கலந்து கொண்டு தீனாநாத் மங்கேஷ்கர் விருதை பெற்றுக் கொண்டார். அவருக்கு விருதை வழங்கியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத்.