‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
இந்தியாவின் குயில் என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். மறைந்த தனது அப்பா தீனாநாத் மங்கேஷ்கர் நினைவாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்கள், சாதனையாளர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறார். இந்த ஆண்டும் மும்பையில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். பாலிவுட் நடிகர் ஆமீர்கான், இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், நடிகை வைஜயந்தி மாலா பாலி ஆகியோருக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டது.
கடந்த 16 ஆண்டுகளாக எந்த பொது மேடையிலும் எந்த விருதையும் பெற்றுக் கொள்ளாதவர் ஆமீர்கான். அரசு தவிர்த்த விருதுகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவந்தார். லதா மங்கேஷகருக்கு மதிப்பளித்து இந்த விழாவில் கலந்து கொண்டு தீனாநாத் மங்கேஷ்கர் விருதை பெற்றுக் கொண்டார். அவருக்கு விருதை வழங்கியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத்.