தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு சுமார் இரண்டு மாதங்கள் வரை சென்னையில் உள்ள பிரசாத் லேப்பில் போடப்பட்ட குடிசைப் பகுதி செட்டில் நடந்தது. அதன் பின் நயன்தாராவிற்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் படப்பிடிப்பு தடைபட்டது.
இப்போது அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்காக படக் குழுவினல் மலேசியாவிற்குச் சென்றுள்ளனர். அங்கு சுமார் 23 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 6 மாத காலமாக முன்பணி வேலைகளைச் செய்ததாகவும் சுமார் 75 பேர் மலேசியாவுக்குச் செல்வதாகவும் தயாரிப்புத் தரப்பில் அறிவித்துள்ளனர். வெளிநாடு செல்வதைப் பற்றிக் கூட ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள்.
'ரெமோ' படத்தைத் தொடர்ந்து 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பகத் பாசில், சினேகா உள்ளிட்டவவர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.