ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராம்கோபால் வர்மாவையும், சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே பல முக்கிய நிகழ்வுகளைப் பற்றி தன்னுடைய டிவிட்டரில் அவர் கருத்துக்களைப் பதிவிட்டுக் கொண்டிருப்பார்.
பிரபல தெலுங்குத் திரைப்பட இயக்குனரும், நடிகருமான கே. விஸ்வநாத்திற்கு நேற்று தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. தென்னிந்தியத் திரையுலகத்தினர் அவருக்குத் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்க, ராம்கோபால் வர்மா மட்டும் மாறுபட்ட கருத்தை பதிவிட்டார்.
“தாதா சாகேப் பால்கேவை விட கே. விஸ்வநாத் மிகச் சிறந்த இயக்குனர். தாதா சாகேப் பால்கே விருதை கே. விஸ்வநாத்திற்கு அளித்ததற்குப் பதிலாக கே. விஸ்வநாத் விருதை பால்கேவுக்கு வழங்கியிருக்கலாம். எனக்கு பால்கே மீது மரியாதை இல்லை என்று அர்த்தமில்லை. பால்கேவின் படங்களை விட கரண் ஜோஹர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பால்கே 95 படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால், ஒரு படம் கூட கரண் ஜோஹரின் படங்கள் அளவிற்கு இருந்தது இல்லை. பழையனவற்றைப் பற்றிப் பேசுவதை விட புதியவற்றிற்கு அங்கீகாரம் அளிக்கலாம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
வழக்கம் போல ராம்கோபால் வர்மாவின் இந்தக் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.