இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி |
ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சர்ச்சைகள் கிளம்பும். இந்தாண்டும் தேசிய விருதுக்கு சர்ச்சைகள் கிளம்பின. விருது தேர்வுக்குழுவின் தலைவரான பிரியதர்ஷன், ஒருதலை பட்சமாக விருதை அறிவித்துள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, அக்ஷ்ய் குமாரின் நண்பர் பிரியதர்ஷன் என்பதால் இந்தாண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அக்ஷ்ய் குமாருக்கு அறிவிக்கப்பட்டது என்று சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் ஸ்டண்ட் நடிகர்களுக்கான நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அக்ஷ்ய் குமார் கலந்து கொண்டார். அப்போது, அக்ஷ்ய் குமாரிடத்தில் தேசிய விருது சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அக்ஷ்ய், கடந்த 25 ஆண்டுகளாக இந்த சினிமா துறையில் நான் இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் விருது அறிவிப்பின் போது இதுபோன்ற சர்ச்சைகள் எழுகின்றன. 25 வருடங்களுக்கு பிறகு எனக்கு இப்போது தான் தேசிய விருது கிடைத்துள்ளது. ஒருவேளை அதற்கு நான் தகுதியானவன் அல்ல என்று நீங்கள் கருதினால், விருதை வேண்டுமானால் திருப்பி தந்துவிடுகிறேன் என்று கோபமாக கூறியுள்ளார்.