ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சர்ச்சைகள் கிளம்பும். இந்தாண்டும் தேசிய விருதுக்கு சர்ச்சைகள் கிளம்பின. விருது தேர்வுக்குழுவின் தலைவரான பிரியதர்ஷன், ஒருதலை பட்சமாக விருதை அறிவித்துள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, அக்ஷ்ய் குமாரின் நண்பர் பிரியதர்ஷன் என்பதால் இந்தாண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அக்ஷ்ய் குமாருக்கு அறிவிக்கப்பட்டது என்று சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் ஸ்டண்ட் நடிகர்களுக்கான நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அக்ஷ்ய் குமார் கலந்து கொண்டார். அப்போது, அக்ஷ்ய் குமாரிடத்தில் தேசிய விருது சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அக்ஷ்ய், கடந்த 25 ஆண்டுகளாக இந்த சினிமா துறையில் நான் இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் விருது அறிவிப்பின் போது இதுபோன்ற சர்ச்சைகள் எழுகின்றன. 25 வருடங்களுக்கு பிறகு எனக்கு இப்போது தான் தேசிய விருது கிடைத்துள்ளது. ஒருவேளை அதற்கு நான் தகுதியானவன் அல்ல என்று நீங்கள் கருதினால், விருதை வேண்டுமானால் திருப்பி தந்துவிடுகிறேன் என்று கோபமாக கூறியுள்ளார்.