சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி |
ஹவுஸ்புல்-3 படத்திற்கு பிறகு பிரபுதேவாவின் லெப்டி, நிஷிகாந்த் காமத்தின் ஒரு படம்... என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார் அபிஷேக். இந்நிலையில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பாலிவுட்டின் பிரபலமாக திகழ்ந்த பாடலாசிரியர் சாகிர் லூதியான்வியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளார். இதில் அபிஷேக் பச்சனை நடிக்க கேட்டு வருகிறார். அதேப்போன்று இந்தப்படத்தில் இடம்பெறும் எழுத்தாளர் அமிர்தா பிரீத்தமின் ரோலில் பிரியங்கா சோப்ராவை நடிக்க கேட்டு வருகிறார். ஆனால் இருவரும் இன்னும் உறுதி சொல்லாமல் இருக்கிறார்கள். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒருவேளை அவர்கள் சம்மதம் சொன்னால் அடுத்தப்படியாக படப்பிடிப்பை விரைவாக தொடங்க எண்ணியுள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி.