'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு சினிமா துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1930-ம் ஆண்டு, பிப்., 19-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் காசிநாதுனி விஸ்வநாத் எனும் கே.விஸ்வநாத். சினிமாவில் சவுண்ட் டிசைனராக அறிமுகமாகி, இயக்குநர், நடிகர் என் பன்முகம் காட்டியவர். இவர் இயக்கிய சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து... என 25-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தி, தமிழ் மொழிகளிலும் பிரபலமான இயக்குநராக திகழ்ந்தார்.
இயக்குநராக மட்டுமல்லாது குருதிப்புனல், முகவரி, காக்கை சிறகினிலே, யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, உத்தம வில்லன், லிங்கா... என நிறைய தமிழ் படங்களில் நடிகராகவும் அசத்தியுள்ளார். ஏற்கனவே பத்மஸ்ரீ விருது, 5 முறை தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள கே.விஸ்வநாத்திற்கு இப்போது மற்றொரு மகுடமாக இந்தாண்டு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசால் சினிமா துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது.