வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
அரண்மனை-2, நாயகி என சில ஹாரர் படங்களில் நடித்துள்ள த்ரிஷா, தற்போது மாதேஷ் இயக்கத்தில் நடித்திருக்கும் மோகினி படம் அவரை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் படமாக வெளிவர இருப்பதாக சொல்கிறார்கள். காரணம், எத்தனையோ பேய் படங்கள் வந்து கொண்டிருந்தபோதும் இந்த படம் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்குமாம். பேய் படம் என்றாலே கத்தல், கதறல், அலறல், மிரட்டல் என்றுதான் அதிரடியாக படமாக்குவார்கள். ஆனால் இந்த மோகினி படம் அமானுஷ்ய உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாம்.
அதோடு, இந்த படத்தில் வைசாலி-வைஷ்ணவி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. அதில் ஒருவர் பிளாஷ்பேக்கில் வந்து செல்வாராம். இந்த இரண்டு வேடங்களிலும் ஒன்றுக்கொன்று சாயல் இல்லாத வகையில், மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்திருக்கிறாராம் த்ரிஷா. அதற்காக அவர் நிறைய ஹோம் ஒர்க்கும் செய்துள்ளாராம். ஆக இத்தனை வருட சினிமா பயணத்தில் த்ரிஷாவுக்கு இந்த மோகினி அழுத்தமான முத்திரை பதிக்கும் படமாக இருக்கும் என்கிறார்கள்.