தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அரண்மனை-2, நாயகி என சில ஹாரர் படங்களில் நடித்துள்ள த்ரிஷா, தற்போது மாதேஷ் இயக்கத்தில் நடித்திருக்கும் மோகினி படம் அவரை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் படமாக வெளிவர இருப்பதாக சொல்கிறார்கள். காரணம், எத்தனையோ பேய் படங்கள் வந்து கொண்டிருந்தபோதும் இந்த படம் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்குமாம். பேய் படம் என்றாலே கத்தல், கதறல், அலறல், மிரட்டல் என்றுதான் அதிரடியாக படமாக்குவார்கள். ஆனால் இந்த மோகினி படம் அமானுஷ்ய உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாம்.
அதோடு, இந்த படத்தில் வைசாலி-வைஷ்ணவி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. அதில் ஒருவர் பிளாஷ்பேக்கில் வந்து செல்வாராம். இந்த இரண்டு வேடங்களிலும் ஒன்றுக்கொன்று சாயல் இல்லாத வகையில், மாறுபட்ட பர்பாமென்ஸை கொடுத்திருக்கிறாராம் த்ரிஷா. அதற்காக அவர் நிறைய ஹோம் ஒர்க்கும் செய்துள்ளாராம். ஆக இத்தனை வருட சினிமா பயணத்தில் த்ரிஷாவுக்கு இந்த மோகினி அழுத்தமான முத்திரை பதிக்கும் படமாக இருக்கும் என்கிறார்கள்.