ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இறுதிச்சுற்று படத்தில் ரித்திகா சிங்கின் அப்பாவாக நடித்து கவனிக்கப்படும் நடிகரானவர் காளி வெங்கட். அதற்கு முன்பு வரை காமெடியனாக மட்டுமே இருந்து வந்த அவரை இப்போது மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் ஹீரோவின் நண்பன் என்பதை தாண்டி தற்போது குணசித்ர நடிகர் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறார் காளி வெங்கட்.
மேலும், யதார்த்த மனிதரான காளிவெங்கட், தன்னைப்பற்றிய விசயங்களையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். அந்த வகையில், சினிமாவில் நடிகராவதற்கு முன்பு சொந்த ஊரான கோவில்பட்டியில் இருந்தபோது எனது தந்தையுடன் கொத்தனார் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது வேலை முடிந்து கை கால்களை கழுவிக்கொண்டு வந்ததும் சம்பளம் கொடுப்பார்கள். கையில் ஈரம் காய்வதற்கு முன்பு சம்பளத்தை வாங்குவோம். அது மனதுக்கு நிறைவாக இருக்கும்.
அதேபோல் இப்போது சில தயாரிப்பாளர்களும் நடித்து முடித்ததும் உடனே சம்பளத்தை தருகிறார்கள். அப்போது எனக்கு கொத்தனார் வேலை செய்து விட்டு ஈரம் காய்வதற்கு முன்பு சம்பளம் வாங்கிய அந்த பழைய ஞாபகங்கள் தான் மனதில் வந்து செல்லும். என்ன இருந்தாலும் வியர்வை சிந்தி உழைத்த உழைப்புக்கு உடனடியாக கூலி கிடைப்பதில் இருக்கிற சந்தோசம் எதிலும் இருக்க முடியாது என்கிறார் காளி வெங்கட்.